வள்ளி திருமணம் - மரப்பாவைக் கூத்து 13-09-2026 (ஞாயிறு மாலை 5 மணிக்கு)

அன்புடையீர் வணக்கம்

மொழியும் கலையும் புழங்கப்பட்டுக்கொண்டே இருக்கவேண்டும். நாட்டார் நிகழ்கலை கலைஞர்களுக்கு (பொம்மலாட்டம், தோற்பாவை நிழற்கூத்து, கூத்து) நிகழ்வுகள் வழி வருமானம் பெற களரி அறக்கட்டளை நடத்தும் அரங்க நிகழ்வுகளுக்கு தங்களை அன்போடு வரவேற்கிறோம். தாங்களாக தனித்தோ, நண்பர்களோடு இணைந்து ஒரு குழுவாகவோ, அல்லது தாங்கள் சேர்ந்து இயங்கும் தமிழ் கலை இலக்கிய அமைப்புகள், தமிழ் சங்கங்கள் வழியாகவோ, அல்லது தங்கள் பணியிட மனிதவள மேம்பாட்டு துறை CSR உதவி நடவடிவக்கைகள் வழியாகவோ, அல்லதுஅவரவர் ஊரில் நடக்கும் கோயில் திரு விழாக்களுக்கோ இந்த அரிய கலைகளை நிகழ்த்தி அதுவழியாக ஒரு வருமானம் பெற்று கலைஞர்கள் உயிர்த்திருக்க நிகழ்வு வாய்ப்புகள் தந்து உதவலாம். அப்படி சாத்தியங்கள் இல்லை எனில் நாங்கள் களரி அறக்கட்டளை நடத்தும் நிகழ்வுகளுக்கு இயன்ற கொடை வழங்கி உதவ வேண்டுமாய் கேட்டுக்கொள்கிறேன்.

இவண்
M.Harikrishnan,
Managing Trustee,
Kalari Heritage and Charitable Trust

அனைவரும் வருக !

linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram